இந்திய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 05 கிலோ 500 கிராம் தங்கம் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. 

டுபாயில் இருந்து வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது