புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட விசேட அனுமதி!

நாடளாவிய ரீதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கைதிகளையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் அனைத்து சிறைச்சாலைகளும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சிறை விதிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி கைதியின் சார்பில் உறவினர்கள், மூவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.