இலங்கையில் மற்றுமோர் கொரொனோ மரணம்!

  கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், நேற்று (29) உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கொவிட் தொற்று இருப்பது உறுதி

சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை நீண்ட இடைவெளியில் பின்னர் கண்டி, கம்பஹாவை தொடர்ந்து இலங்கையில் பதிவான மூன்றாவது கொரோனா மரணம் இதுவாகும்.