ஜனாதிபதி ரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்

 பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

லொஹான் ரத்வத்த கடந்த 29ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 2 வர்த்தமானி அறிவித்தல்களும் நேற்று வெள்ளிக்கிழமை (2) அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி அவர் இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற நிலையில் தற்போது இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.