கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல கோடி பெறுமதியான தங்க நகைகளுடன் சிக்கிய பெண்

  கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 58 மில்லியன் ரூபா பெறுமதியான 02 கிலோ 750 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற பெண் ஒருவர் இன்று (10.02.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பெண் ஒருவரே விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையத்தின் கழிவறை ஒன்றில் வைத்து சந்தேக நபருக்கு மற்றுமொரு பெண்ணினால் நகைகள் மற்றும் ஜெல் தொகை அடங்கிய பொதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை விமான நிலையத்திற்கு வெளியே உள்ள நபரிடம் கொடுத்ததன் பின்னர் அறுபதாயிரம் ரூபாவை தருவதாக உறுதியளித்தமையால் தான் இந்த பொதியை பெற்று வந்ததாக கைது செய்யப்பட்ட பெண் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் வெயாங்கொடை – மிரிதியலந்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பெண் ஊழியரை கைது செய்து தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.