மத்திய வங்கி குறித்து நிதி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கை மத்திய வங்கியால் விடுக்கப்படும் செய்திகள் தொடர்பில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், இலங்கை மத்திய வங்கியினால் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படு வருகிறது. இவ்வாறான விடயங்கள் கவலையளிக்கின்றன.

தயாரிக்கப்படும் அறிக்கை

இந்த விடயங்களுக்கு தீர்வு காணும் வகையில், மத்திய வங்கியினால் விடுக்கப்படும் செய்திகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

குறித்த அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.