கிளிநொச்சியில் நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரி போராட்டம் ஒன்று ஆரம்பமானது.

குறித்த போராட்டம் இன்று (20) 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆம்பமானது.

தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்க ஆரம்பமாகியது.