கொழும்பு கோர விபத்தில் பல்கலை விரிவுரையாளர் மரணம்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி விரிவுரையாளர் லக்மினி போகமுவ, வாகன விபத்தில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஏராளமான மக்கள் அவரது மரணம் தொடர்பில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் பத்தரமுல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

பெண் விரிவுரையாளர் மரணம்

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.