வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

வாகன இறக்குமதி தொடர்ந்தும் நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் (20.2.2024) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குழு நியமனம்
அத்தோடு, வாகனங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் எத்தனை வாகனங்கள் தேவை என்பவற்றை தீர்மானிக்க ஒரு குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அண்மைக் காலத்தில் 29 வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.