கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆபத்தான கட்டுமானங்கள்!

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை

இது தொடர்பில் உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.