பாடசாலை ஒன்றில் மின்விசிறி விழுந்ததில் இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கண்டி, அஸ்கிரியவில் உள்ள பாடசாலையொன்றில் மின்விசிறி வீழ்ந்ததில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை நிர்வாகம்

கடந்த சில நாட்களாகவே மின்விசிறி மின் வயரில் சிக்கிய நிலையிலேயே சுழன்றதாகவும், இது குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் கூறியும் சரி செய்ய எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.