தனியார் காணி ஒன்றிலிருந்து மீட்க்கப்பட்ட சடலம்!

பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெயிகஸ்தலாவ பிரதேசத்தில் தனியார் காணியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (25.03.2024) மீட்கப்பட்டுள்ளதோடு சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, சடலத்தை அடையாளம் காண்பதற்குப் பொது மக்களின் உதவியைப் பொலிஸார் கோரியுள்ளனர்.

மேலதிக விசாரணைகள்

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.