ரயில் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கரையோர ரயில் மார்க்கத்தில் இன்றைய தினமும் சில ரயில்கள் இரத்துச் செய்யப்படக்கூடும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் சில கரையோர ரயில்கள் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேற்றைய தினம் (30-03-2024) கரையோர ரயில் மார்க்கத்தில் 25 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.