மைத்திரிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.