வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி அமைச்சரவை வழங்கிய தீர்மானங்களுக்கு அமையவே இந்த செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்

இதேவேளை நாட்டில் பணப்பரிவர்த்தனை கட்டுப்பாட்டால் வாகனங்களை இறக்குமதி செய்வதை

நிறுத்திவிட்டோம்.

ஆனால் சுற்றுலாத்துறையில் 6 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்கள் உள்ளன

இப்போது எங்களின் வாகனங்கள் பழையதாகிவிட்டன .

250 பேருந்துகள் மற்றும் 750 வேன்களை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்