கிராம உத்தியோகஸ்தர்களின் கொடுப்பனவு திருத்தியமைப்பு!

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, கிராம சேவை உத்தியோகத்தர்களின் அலுவலக கொடுப்பனவுகள் மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் ஏப்ரல் 01, 2024 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மாநகர சபை எல்லைக்குள் மாதாந்த அலுவலக கொடுப்பனவு 3,000 ரூபாவாகவும், பிரதேச சபை எல்லைக்குள் மாதாந்த அலுவலக கொடுப்பனவு 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கான எழுதுபொருள் உதவித் தொகையும் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.