எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த இளம் இந்திய பெண்!

இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவி காம்யா கார்த்திகேயன் சமீபத்தில் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளம் வயது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச எவரெஸ்ட் தினத்தை முன்னிட்டு காத்மாண்டுவில் இன்றையதினம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நேபாள பிரதமர் பிரசந்தா, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த காம்யா கார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.