இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் !

இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான அவசர தொலைபேசி இலக்கத்தை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

1905 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று (4) இதனை அறிவித்துள்ளது.

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சேவையாற்றுவோரின் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் பொதுமக்கள் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் இலஞ்சம் அல்லது ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 1954 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக குறிப்பிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.