குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்திற்குள், சாரதியினால் 17 வயதுடைய பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தற்போது, சம்பவத்தை அறிந்த, 17 வயது மாணவியின் தாயார் போகமுவ பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
17 வயதுடைய மாணவியின் முறைப்பாட்டை கவனித்த போகமுவ பொலிஸார், இது குருநாகல் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதால், மேலதிக விசாரணைகள் குருநாகல் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் சாரதி, குருநாகல் கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் சாரதி ஆவார். சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.