வவுனியாவில் அதிரடியாக கைது செய்ப்பட்ட நபர் ! வெளியான காரணம் !

வவுனியாவில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வவுனியா, ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்று வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.