என்னுடைய தந்தையை போன்று நானும் கசப்பான சில விடயங்களை செய்ய வேண்டி வரலாம்!

மக்களுக்கு முன்னுரிமை வழங்கி நடந்து கொள்வோம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை சில தீர்மானங்களை எடுக்கும் போது தந்தையை போன்று கசப்பான சில விடயங்களை செய்ய வேண்டி வரலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அவை மக்களுக்கானது என்பதனால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது ஊடக சந்தப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்