இருளில் மூழ்கியது கொழும்பின் புறநகர் பகுதி!

இலங்கையின் புறநகர் பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக சில பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று திடீரென மின்சாரம் தடைபட்டதால் சில பகுதிகள் இருளில் மூழ்கி மக்கள் அவதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு புறநகர் பகுதிகளான இரத்மலானை,சொய்சாபுற போன்ற பகுதிகளில் சுமார் 3 மணித்தியாலயத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.