புதுக்குடியிருப்பில் பாரிய வெடிகுண்டு ஓன்று மீட்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் சுமார் 200 கிலோகிராம் எடையுடைய ஆட்லரி வெடிகுண்டு இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் நிலத்தில் புதையுண்டு வெடிக்காத நிலையில் காணப்பட்ட ஆட்லரி வெடிகுண்டு ஒன்றே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த வெடிபொருளை மீட்பதற்கு பொலிஸார் நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஆட்லரி வெடிகுண்டு ஒன்றே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.