இலங்கையில் தீவிரமடையும் டெல்டா தொற்று!

  இலங்கையில் கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா வைரஸின் அச்சம் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில், மற்றுமொரு நோய் பற்றிய எச்சரிக்கையொன்று வந்துள்ளது.

டீனியா என்ற ஒருவகையான தோல் நோய் இலங்கையில் பரவ ஆரம்பித்திருக்கின்றதாக கூறப்படுகின்றது. குறிப்பாக இந்த நோயானது தொற்று நோய் என்பதுடன், இது வடமத்திய மாகாணத்தில் பரவத் தொடங்கியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

எந்தவொரு வயதை உடையவர்களுக்கும் விரைவில் தொற்றக்கூடிய சுபாவம் கொண்ட இந்த நோய், குறிப்பாக மக்கள் சனநெரிசலாக உள்ள பிரதேசங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.