ஹல்துமுள்ளைப் பகுதியின் வள்ளப்பத்தனை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை கார் ஒன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டு கீழுள்ள வீட்டு முற்றத்தில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
மாத்தரைப் பகுதியிலிருந்து ஹல்துமுள்ளைப் பகுதிக்கு வந்து பம்பரகலை நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு, மீளவும் மாத்தரைக்கு புறப்பட்ட வேளையிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் உடனடியாக ஹல்துமுள்ளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆரம்ப சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைகளுக்குற்படுத்தப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து ஹல்துமுள்ளைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.