முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த பாடசாலை ஆசிரியர்…..!

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது .

பாடசாலை சிறுமிகள்மீது ஆசிரியர் தூஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர்பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில்வைக்க நீதிமன்று உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அவர் வவுனியா சிறையில் தடுத்து வைப்பதற்காக சிறைச்சாலைகள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்