யாழில் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் மரணம்…!

யாழ். தென்மராட்சி, கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சரசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 58 வயதான சுந்தரராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற சம்பவத்தின்போது படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.