வாகன இறக்குமதி இடைநிறுத்தத்தால் பேருந்து தட்டுப்பாடு! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை..!

பழுதடைந்த நிலையில் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகளை புதுப்பித்து சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்றுள்ளது.

வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதை அடுத்து ஏற்பட்ட பேருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வாகவும், அந்நிய செலாவணியை சேமிக்கும் வகையிலும் பழுதடைந்த பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு சேவையில் இணைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.