அரச பாடசாலைகளின் குடிநீர் கட்டணம் – பெற்றோருக்கு மற்றுமொரு சுமை !


அரச பாடசாலைகளின் குடிநீர் கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த ஆண்டு முதல் குடிநீர் கட்டணத்திற்கு அரசு நிதி வழங்காது என அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால், பாடசாலை குடிநீர் கட்டணத்தை பெற்றோர் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.