நானாகவே பதவியை விட்டு விலகுவேன் : மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

“பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் பக்கம்தான் இருக்கின்றார்கள். பெரும்பான்மையினரின் ஆதரவு எனக்கு இருக்கும் வரை நான்தான் பிரதமர். பெரும்பான்மை ஆதரவு எனக்கு இல்லாவிட்டால் நானாகவே விலகி விடுவேன்.” என பிரதமர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு நேற்று மாலை அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

“நாடாளுமன்ற பெரும்பான்மை எனக்கு இருக்கும் வரை என்னை யாரும் பிரதமர் பதவியிலிருந்து அகற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.