நாட்டு மக்களுக்கு வன்முறைத் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் பின்வரும் இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இதற்கமைய, 076 739 39 77 மற்றும் 011 244 11 46 ஆகிய இலக்கங்களுக்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.