கொழும்பு புகையிரத நிலையத்தில் காணாமல் போன முஸ்லீம் இளைஞன்

மாவத்தகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்வத்த உடப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஹமட் நஸ்லான் என்ற இளைஞர், கடந்த 8ஆம் திகதி கொழும்பு ரயில் நிலையத்தில் வைத்து காணாமற் போயுள்ளார்.

கொழும்பில் பிட்டிங் தொழில் புரிவதற்காக சென்றிருந்த குறித்த இளைஞர், தனது நண்பருடன் கொழும்பிலிருந்து ஊருக்குச் செல்வதற்காக, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு வருகைத் தந்த போதே காணாமல் போயுள்ளார் என அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

தனக்கும் காணாமல் போன நண்பருக்கும் ரயில் டிக்கட்டை பெற்றுக்கொண்டு வரும் போதே இவ்வாறு காணாமற் போயுள்ளதாக, கோட்டை பொலிஸில் அவர் முறைபாடு செய்துள்ளார்.

இவர் பற்றிய தகல்வகள் கிடைக்கமாயின் அவருடைய தந்தை எம். டி. சாலிஹீன் 0758005637 அல்லது அவருடைய உறவினர் ஏ.எம். முஜாஹிரின் 0772820820 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு குடும்பத்தினர்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.