பாம்பு தீண்டியதால் ஆண் குழந்தை பலி!

பாம்ப தீண்டியதில் ஆண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது இன்றையதினம் மொனராகலை- கொலன்சின்ன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியைச்சேர்ந்த ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

சில குழந்தைகளுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே, விரியன் பாம்பு குழந்தையின் காலை தீண்டியுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து குழந்தை மொனராகலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.