கப்பல் வழியாக தப்பியோடும் அரசியல்வாதிகள்!

நாட்டில் இடம்பெற்று வந்த மக்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் அதிகமானதையடுத்து தென்னிலங்கையில் வாழும் அரசியல் வாதிகள் கப்பல் வழியாக தப்பியோடும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, விமான நிலையம் சென்றுள்ள நிலையில், பல அரசியல்வாதிகள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற இரண்டு கப்பல்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

மக்களின் போராட்டத்தை அடுத்து நிலைமை உணர்ந்து கொண்ட அரசியல்வாதிகள் தப்பியோடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ராஜபக்ஷ குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் மற்றும் மஹிந்தவுக்கு நெருக்கமான பல அரசியல்வாதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.