தனது காட்டு மிராண்டித்தனத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார் ரணில்! அனைவரும் ஒன்று திரளுங்கள் : அநுர அழைப்பு!

நேற்று இரவிலிருந்து கொழும்பு காலிமுகத்திடிலில் ஆர்ப்படா்டக்காரர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு காரணமான ரணிலின் செயலுக்கு அனைவரும் ஒன்று திரளுங்கள் என அநுர தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றையதின்ம அவரின் ட்விட்டர் பக்கத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் மீது ரணிலின் உத்தரவுக்கு அடுத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை இராணுவத்தினர் நடத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்துள்ளதாகவும் இரு ஊடகவியலாளர் மற்றும் பொதுமகன் ஒருவரை இது வரை காணவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.