மட்டக்களப்பில் சிசுவை கொன்று கிணற்றுக்குள் வீசிய மருத்துவர் : அம்பலமான மருத்துவரின் ரகசியங்கள்!

மட்டக்கள்ளப்பில் சிசுவை கொன்று கிணற்றுக்குள் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது கடந்த 2017 ம் ஆண்டு நடந்ததையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடந்த விசாரணைக்கு அமைவாக இன்றைய தினம் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் பணி புறிந்து வந்த பணிப்பெண்ணின் குழந்தையென விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நடத்தப்பட்ட மரபு பரிசோதனையில் வைத்தியர் குழந்தையின் தந்தை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார் மருத்துவரை கைது செய்துள்ளார்.

கடந்த 2017 ம் ஆண்டு வைத்தியவரின் தகாத உறவில் பணிப்பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அவர் அக்குழநதையை சீலையால் சுற்றி கொண்டுவிட்டு கிணற்றுக்குள் வீசியுள்ளார்.

குழந்தையை பெற்றெடுத்த பணிப்பெண்ணிந்கு ரத்தப்போக்கு வந்ததையடுத்து அப்பெண் மருத்துவமணையில் சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு பின் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது இதனால் அம்மருத்துவர் பொலிஸாரிடம் துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனால் பொலிஸார் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்னை அழைத்து விசாரித்த போது கிணற்றில் இற்ந்த குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அக்குழந்தை யாருடையது என விசாரணை நடத்திய போது அது தனக்கும் வைத்தியருக்கும் பிறந்த குழந்தை என்றும் வைத்தியர் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்து கிணற்றில் எரிந்ததாக தெரியவந்துள்ளது.

இதனையத்து மருத்தவரிடம் நடத்திய விசாரணையில் மருத்துவர் அதனை மறுத்துள்ளார் பின்னர் நடத்திய மரபு பரிசோதனையில் குழந்தை மருத்ததுவருடையது தான் என உறுதியானது.

இதனையடுத்து பொலிஸார் வைத்தியரை கைது செய்துள்ளனர்.