கடற்கரையில செல்பி எடுக்கும் போது காணாமல் போன மனைவி : பின்னர் கணவருக்கு வந்த அதிர்ச்சித்தகவல்!

கடற்கரையில் தனது இரண்டாம் ஆண்டு திருமண ஆண்டை கொண்டாட வந்த தம்பதியினர் அங்கு செல்பி எடுத்து கொண்டாடிய நிலையில் கணவர் போன் கதைக்க சென்றதையடுத்து மனைவி காணாமல் போயுளளார்.

இச்சம்பவமானது ஐதராபாத் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல் போன யுவதி சாய் ப்ரியா என்ற பெண் மற்றும் இவரது கணவர் ஃபார்மா கம்பெனியில் பணியாற்றி வருபவர் ஸ்ரீநிவாஸ் என்பவர் ஆவர்.

இருவருக்கும் இடையில் கல்யாணம் முடிந்து இரண்டாவது ஆண்டினை கடற்கரையில் கொண்டாடி வந்துள்ளார்கள்.

இதன்போது கணவருக்கும் போன் வந்த நிலையில் மனைிவியை விட்டு தனியாக சென்றுள்ளார் திரும்பி வந்து பார்க்கையில் மனைவி காணாமல் போயுள்ளார் இதனால் அதிர்ச்சியுற்ற கணவர் மனைவி கடல் அழையில் அடித்துச்சென்றிருக்கலாம் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் மீட்பு படையினர் அப்பெண்ணை தேடியுள்ளனர்.

இதன்போது சில மணிநேரங்கள் கழித்து யுவதி அம்மா தொலைப்பேசிக்கு அவரது தொலைப்பேசியில் இருந்து நான் நலமுடன் இருப்பதாகவும் நடந்த திருமணத்தில் இஷ்டம் இல்லாததால் தனது முன்னால் காதலன் கூட ஓடி வந்ததபக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீட்பு படையினர் கடலில் அடித்து செல்லாத யுவதிக்கு தேடுதல் முயற்சியில் ஈடுபட்டதால் கோடிக்கணக்கில் செலவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.