இலங்கையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் : வெளியான தகவல்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை இலங்கை கொண்டு வரவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.