நாட்டில் எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

விநியோகத் தட்டுப்பாடு, இறக்குவதில் தாமதம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் முன்பணம் செலுத்துவதில் தாமதம் காரணமாக நீண்ட வரிசையில் நிற்பதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து எரிபொருட்களின் கூடுதல் இருப்புக்கள் அடுத்த 3 நாட்களில் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் 2 நாட்களில் எரிபொருள் வரிசையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.