திருமண விழாவில் பங்கேற்க சென்றவர்களுக்கு நடந்த சோகம்!

வலப்பனை மஹா ஊவா பகுதியில் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 6 பேர் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து வலப்பனை நோக்கி திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வந்த பேருந்து, திரும்பும் வழியில் விபத்துக்குள்ளானதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.