தாயை துன்புறுத்திய தந்தையை கொலை செய்த மகன் : பொலிஸார் விசாரணை!

குடிபோதையில் தனது தாயை துன்புறுத்தி தாக்கிய தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் ஹந்த ஒலுவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என ஊர்போக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களது வீட்டில் நேற்று (08) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலைச் சம்பவம் தொடர்பில் 17 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.