உருகுழைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 7 பிள்ளைகளின் தந்தை : வெளியான காரணம்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கிரான்குளம் பகுதியில் தனியார் காணியொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய 7 பிள்ளைகளின் தந்தை ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று காட்டுப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.