பிறந்தநாளில் நண்பர்களுடன் சென்ற பாடசாலை மாணவர் கடலில் மூழ்கி பலி!

பைகல கலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் தனது 17ஆவது பிறந்த தினத்தன்று நண்பர்கள் இருவருடன் நீராடச் சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பைகல பொலிஸார் தெரிவித்தனர்.

ரண்முத்து தேரன் சில்வா என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவனே கடலில் மூழ்கி காணாமல் போனார்.

பைகலை கலமுல்ல புனித அந்தோணி வீதி முனையில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது மூவரும் திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையில் அருகில் இருந்த வாலிபர் தண்ணீரில் குதித்து மாணவியை காப்பாற்றினார்.

மற்றைய இரு மாணவர்களும் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர்களில் ஒருவரைக் காப்பாற்றும் போது மற்றைய மாணவர் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.