பாடசாலை முடிந்த சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபர்கள் : அவர்களிடம் சிறுமியை போராடி மீட்ட பெண்!

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியை துரத்த முயன்ற முகமூடி அணிந்த நபரிடம் இருந்து பெண்ணொருவர் காப்பாற்றிய சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இரத்தினபுரி பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரத்தினபுரி பாடசாலையில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் நேற்று பாடசாலை விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ​​முட்புதரில் மறைந்திருந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர், சிறுமியின் கழுத்தில் அணிந்திருந்த பட்டையால் கைகளைப் பின்னால் கட்டிக் கடத்த முயன்றார்.

இதனிடையே, அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் சிறுமியை காப்பாற்ற ஓடி வந்தார்.

இது தொடர்பில், இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே பட்டப்பகலில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.