சற்றுமுன் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து !

கிளிநொச்சியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று மதியம் 1 மணியளலவில் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்த சிறிய ரக வான் முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.