இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ! ஒருவர் பலி ! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு !

கடந்த ஏழு நாட்களில், இலங்கையைச் சேர்ந்த 42 பேர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய மோசமான வானிலையால் கோவிட் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சுகாதார விதிகள் மற்றும் விதிமுறைகளை முடிந்தவரை பின்பற்றுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுவரை, 20,2571 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் பெற்றுள்ளனர்.

எவ்வாறாயினும், தொற்றுநோயியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இந்த நாட்டில் கோவிட் பரவியதில் இருந்து பத்தாயிரத்து அறுபத்தைந்து பேர் இறந்துள்ளனர்.

மேலும், ஆறு லட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.