இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்த பயணத்திற்கான இறுதி திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் இதுவாகும்.

நெருக்கடியின் போது, இலங்கையும் இந்தியாவும் முக்கிய அர்ப்பணிப்புகளைச் செய்தன மற்றும் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கான கடன் வரி உட்பட நான்கு அம்ச பொதியை உருவாக்கியது.

இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் நிதி உதவியை கடன்கள், கொடுப்பனவு ஒத்திவைப்புகள் மற்றும் நாணய மாற்று ஏற்பாடுகள் போன்ற வடிவங்களில் வழங்கியுள்ளது.

இதற்கிடையில், ஜெய்சங்கரின் வருகை புத்தாண்டில் இந்தியாவில் இருந்து முதல் உயர்மட்ட வருகை ஆகும்.

இறுதியாக அவர் கடந்த 2022 மார்ச்சில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார்.