சுதந்திர தினம் அன்று மேற்கொள்ளப்பட இருக்கும் மாபெரும் பேரணி!

இலங்கையின் சுதந்திர தினம் எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அந் நாளை கரி நாளாக பிரகடனப்படுத்தி அன்று யாழ் பல்கலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் சிவில் அமைப்புக்களுடன் அண்மையில் மேற்க்கொள்ளபப்ட்ட கலந்துரையாடலை அடுத்து நேற்றைய தினம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திலும் யாழ் பல்கலை மாணவர்கள் மதகுருமார்கள்,சிவில் அமைப்புகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களுடன் கலந்துரையாடலும் மேற்க்கொள்ளப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர் மதகுருமார்கள்,வவுனியா மாவட்ட சிவில் அமைப்புகள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் தமது ஆதரவினை தெரிவித்தனர்..

மேலும் இவ் போராட்டம் தொடர்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் ஆதரவு கோரி போராட்டங்கள் நடைபெறவுள்ளன.