அரசின் புதிய வரிச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகும் நாடு!

அரசின் வரிச் சட்டத்திற்கு எதிராக அனைத்து அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் இணைந்து போரரட்டம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அனைத்து தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசினால் அருகம் செய்யப்பட வருமான வரிச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குஅரசு உரிய பதிலை வழங்காது விடின் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் நாளை கடுமையான தொழிற்சங் நடவடிக்கை எடுக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் நாளை அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து வரி விதிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் அத்துடன் இந்த வரிவிதிப்பை அரசு மீளப் பெரும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட பல தொழிற்சங்கங்கள்  முன்மொழிந்துள்ளதாகவும் தொழிற்சங்க மூத்த தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.