எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திர தினத்தன்று விடுதலையாகவுள்ள 3 அரசியல் கைதிகள்!

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் பெப்ரவரி 4ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளியின் விடுதலை கைவிடப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 1, 2008 அன்று கொழும்பில் உள்ள இந்து கோவிலுக்குள் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கொல்ல முயற்சித்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ள நபர் விடுவிக்கப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலாளியை விடுவிக்க விரும்புவதாக பொன்சேகா நாடாளுமன்றத்தில் அறிவித்த போதிலும், அவரது கையொப்பமிடப்பட்ட ஒப்புதல் பெறப்படவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்னும் அவரிடம் ஆலோசனை நடத்தவில்லை என பொன்சேகாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.